வழக்கறிஞர்கள் இல்லாமலே வழக்கினை தாக்கல் செய்யமுடியுமா

வழக்கறிஞர்கள் இல்லாமலே வழக்கினை தாக்கல் செய்யமுடியுமா

வழக்கறிஞர்கள் இல்லாமலே வழக்கினை தாக்கல் செய்யமுடியுமா

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

வழக்கறிஞர்கள் இல்லாமலே ஒரு நபர் ஒரு வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியுமா? அல்லது தன்மீது ஏதேனும் வழக்கு தாக்கலாயிருந்தால் அந்த வழக்கினை வழக்கறிஞர்கள் இல்லாமலே தானே அந்த வழக்கினை நடத்த முடியுமா சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று பார்க்கப்போகிறோம். இந்தியாவில் இருக்கிற சட்டங்களில் நிச்சயமாக வழக்கறிஞர்கள் நியமித்துத்தான் ஒரு வழக்கு நடத்த வேண்டும் என்று எந்த சட்டத்திலல் கட்டாய படுத்தவில்லை.

Consumer Rights Violations

இன்னும் ஒரு சில சட்டத்தில் வழக்கறிஞர்களே அவசியமில்லை யாருவேண்டுமென்றாலும் பொதுமக்கள் நேரடியாக நீதிமன்றத்தில் பெட்டிஷன் தாக்கல் செய்யலாம் அப்படியென்று உதாரணத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தில் Consumer Rights Violations இது இருந்தாலும் நீதிமன்றத்துக்கு உரிய படிவத்தில் உரிய கட்டணங்களை செலுத்தி யார் பாதிக்க பட்டுருக்கிறார்களோ அவர்கள் நேரடியாக வழக்கை நடத்தமுடியும். இந்த மாதிரி கன்சுமர் கேஸ் மட்டுமில்லாமல் சொத்து சம்பத்தப்பட்ட சிவில் வழக்குகளில் கூட வழக்கறிஞர்கள் நிச்சயமாக நியமித்துதான் வழக்கை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குற்றவியல் வழக்குகளில் கூட எந்த எதிரியும் Accused என்று சொல்லுகிற குற்றம்சாட்ட பெற்ற நபரும் வழக்கறிஞர்கள் வைத்து தான் வழக்கை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏன் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகளில் ஆஜராகி அவர்களுடைய கட்சிக்காரருக்காக வாக்குவாதம் செய்து கேஸை நடத்தி எதுனால இந்த மாதிரிஎல்லாரும் வழக்கறிஞர்கள் வைத்துருக்கிறார்கள் என்று கேட்கலாம், வழக்கறிஞர்களுக்கு என்ன வழக்கு எந்த மாதிரியான சட்டத்தில் இருக்கு அந்த சட்டத்தில் என்னென்ன உரிமைகள் சம்பந்தப்பட்ட நபருக்கு இருக்கு என்ற விஷயங்கள் எல்லாம் தெளிவாக தெரியும். சட்ட நடைமுறைகள் மட்டுமில்லாமல் அதே மாதிரி வழக்கில் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவை என்ன மாதிரியான தீர்ப்புகளை இதுக்கு முன்பு கொடுத்திருக்கு அந்த மாதிரி தீர்ப்புகளில் படித்துப்பார்த்து அதன் படி தன் முன்னாடி இருக்கிற அந்த கட்சி காரருக்கு அதேமாதிரியான வழக்குகளில் அந்தமாதிரியான உரிமைகளெல்லாம் அந்த நீதிமன்றம் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்கிறபோது ஆதாரத்தோடு கேட்கிறபோது நிச்சயமாக யார் வழக்கு நடத்துகிறார்களாளோ அவர்களுக்கு நிறைய பயன்கள் இருக்கு. வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்தாதவங்களுக்கு இந்தமாதிரியான அனுபவங்களோ, சட்டஅறிவோ, தீர்ப்புகள் கொடுத்த விஷயமோ தெரியாமல் போய்விடும் .அந்தமாதிரி தெரியாமல் போய்விட்டால் அது மூலமாக அவர்களுக்கு கிடைக்கின்ற பயன் நன்மை உரிமைகள் எல்லாம் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் அதனால்தான் எல்லோரும் வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்துகிறார்கள்.

Legal Services Authority

எனக்கு வழக்கறிஞர்கள் நியமிக்க எனக்கு வசதி இல்லை என்று ஒருத்தர் சொல்லுகிறாரென்றால் நிச்சயமாக வழக்கறிஞர்கள் வேண்டும் என்று யாரேனும் நினைத்து அதற்கு வசதி இல்லை என்று ஒரு மனு மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கின்ற சட்டப் பணிகள் ஆணை குழு என்கிற அலுவலகம் இருக்கு Legal Services Authority என்கிற அரசு அலுவலகம் சட்ட உதவி தேவைப்படுகிறவர்கள் எல்லாம் எந்த வித கட்டணம் இல்லாமல் இலவசமாக சட்ட சேவைகளிலெல்லாம் செய்துதருவதற்காக வழக்கறிஞர்கள் அங்கு திறம்பட செயலாற்றுகிறார்கள். எல்லாநாளும் அது செயல்படும் எல்லா அரசு வேலை நாட்களிலும் எந்த பிரச்னை இருந்தாலும் சட்ட ஆலோசனையோ வழக்கு நடத்துவதற்காகவோ சட்ட பணிகள் ஆணை குழு டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டுக்குள் இருக்கிற அலுவலகத்தில் போய் மனு கொடுத்து இதற்கான வழக்கறிஞர்கள் நியமித்து வழக்கு நடத்தவேண்டுமென்று கேட்டால் நிச்சயம் நிறைய உதவிகள் அதுமூலமாக கிடைக்கும் வழக்கறிஞர்களும் நமக்கு கிடைப்பார்கள் எந்த வித கட்டணங்கள் இல்லாமல் நாம் திறம்பட நம் வழக்கை நடத்தமுடியும்.

https://www.youtube.com/watch?v=wgChuSg-49E

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

குடும்ப நீதிமன்ற விசாரணை முறை

குடும்ப நீதிமன்ற விசாரணை முறை

குடும்ப நீதிமன்ற விசாரணை முறை

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

குடும்ப நீதிமன்றத்தில் என்ன மாதிரியான வழக்கு விசாரணை முறை நடைபெறும் என்று பார்ப்போம். Family Court என்று சொல்லுகிற குடும்ப நீதிமன்றம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டத்திலும் இப்போ இருக்கு சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கூட குடும்ப நீதிமன்றம் ஆரம்பித்து உள்ளனர். மற்ற நீதிமன்றத்திற்கும் குடும்ப நீதிமன்றத்திற்கும்என்ன வித்யாசம் அப்படியென்றால் குடும்ப நீதிமன்றத்தில் ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட கணவன் மனைவி பிரச்னை குழந்தை கஸ்டடி யாரிடம் இருக்கிறது என்கிற பிரச்னை மனைவிக்கு ஜீவனாம்சம் பெறுவதற்கான பிரச்சனை உட்பட எல்லா விவகாரத்து பிரச்சனைகள் குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் நாம் குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வரமுடியும். குடும்ப நீதிமன்றம் என்று சொல்லும்போது இதில் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை வருமா என்று கேட்டால் குடும்ப நீதிமன்றத்தில் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிச்சயமாக வராது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒரு குடும்பத்திற்குள் சகோதர சகோதரிக்குள் அப்பா மகன் ஒரு குடும்பம் என்றாலும் அந்த மாதிரியான சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை சிவில் நீதிமன்றங்களில் தான் தாக்கல் செய்து விசாரணைக்கு கொண்டுவரமுடியும் தவிர நிச்சயமாக குடும்ப நீதிமன்றத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், ஜீவனாம்சம், விவாகரத்து, திருமண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றி மட்டுமே விசாரணைக்கு எடுத்துப்பார்கள்.

First Stage

இந்த மாறி ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தால் முதலில் என்ன ஸ்டேஜ் என்று கேட்டால் First Stage குடும்ப கோர்ட்டில் என்னவென்றால் சம்மன் என்று சொல்லுகிற அழைப்பாணை எதிர்தரப்பினருக்கு நீதிமன்றத்தில் இருந்து வந்த பிறகு அந்த சம்மனில் எந்த தேதியில் வழக்கு விசாரணை நடைபெறும் எந்த நீதிமன்றத்தில் என்கிற விவரம் அதில் சொல்லிருப்பார்கள். அந்த வாய்தா தேதியில் நீதிமன்றத்தில் எதிர்தரப்பினர் கணவன் மனைவி மீது தாக்கல் செய்திருந்தால் இல்லை மனைவி கணவன் மீது தாக்கல் செய்திருந்தால் அந்த எதிர்தரப்பினர் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிற முதல் நாள் முதல் வாய்தாவில் நீதிமன்றம் அவங்க இரண்டு பேரயும் எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும் இரண்டு பேரும் நீங்க கவுன்சிலிங்கிற்கு போங்க என்று சொல்வார்கள்.

Family Courts Act

கவுன்சிலிங் என்று சொல்லப்படுவது Family Courts Act என்று சொல்கிற குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் படி கணவன் மனைவி பிரச்சனைகள் அனைத்தும் முதலில் குடும்ப நல ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகு அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வழக்கு விசாரணை சட்ட ரீதியாக விசாரணை செய்யப்படும் என்று சட்டத்தில் சொல்லபடுகிறது. அதுனால எல்லா குடும்ப நீதிமன்ற வழக்குகளிலும் முதல் வாய்தாவில் நீதிமன்றம் இரண்டு தரப்பினரும் ஆஜராகிற போது நீங்க நீதிமன்றத்துக்கு உள்ளே இருக்கிற வளாகத்துக்குள்ளே இருக்கிற ஆலோசனை அறை குடும்ப நல ஆலோசனை அறைக்கு போய் அங்கு ஆலோசனை செய்வதற்கு சில தனிப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் ஆலோசனைக்கு இரண்டு பேரையும் நீதிமன்றம் அனுப்பும். அந்த ஆலோசனை அறைக்கு தனியாகவோ இரண்டு பேரையும் சேர்த்து வைத்தோ அந்த ஆலோசகர் அவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கு என்று விசாரித்து அதற்கு தகுந்த ஆலோசனைகள் கொடுப்பார்கள். அந்த ஆலோசனைகளை எடுத்துக்கலாம் அல்லது இந்த ஆலோசனைகள் எனக்கு வேண்டியதில்லை நான் வழக்கில் என்ன தாக்கல் செய்திருக்கிறேனோ அதன் படி வழக்கு விசாரணையே நான் செய்ய நான் விரும்புகிறேன் என்று சொல்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை இருக்கு.

கவுன்சிலிங்

இந்த கவுன்சிலிங் எனப்படுவது சட்டத்தின் படி அனைவரும் உட்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும் அந்த கவுன்சிலிங் நிலையில் அந்த ஆலோசகர் சொல்லுகிற விஷயங்களை கண்டிப்பாக அதையே எடுத்துக்கவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் சொல்லுகிற விஷயங்களை நல்லதாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொண்டு இருதரப்பினரும் மனம் ஒத்து சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பிருந்தால் சேர்ந்து வாழ்வதற்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிற ஒரு அமைப்பாகத்தான் இந்த கவுன்சிலிங் ஸ்டேஜ் இருக்கு. அதே மாதிரி முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் இந்த கவுன்சிலிங் ஸ்டேஜ் பொறுத்த வரைக்கும் என்ன கவுன்சிலர் கிட்ட சொன்னாலும் இல்லை ஒருத்தருக்கொருத்தர் சொல்லிருயிருந்தாலும் அது நீதி மன்றத்தில் பதிவாகாது அது ரெகார்ட் ஆகாது அந்த நாளைக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கவுன்சிலிங்கில் இந்த மாதிரி சொன்னீர்கள் என்று யாரும் கேட்க முடியாது அது பதிவும் செய்யமாட்டார்கள் அதனால் கவுன்சிலிங்கில் மனம்விட்டு இரு நபர்களும் பேசுவதற்கு அந்த பிரச்னை தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அது அமைகிறது.

https://www.youtube.com/watch?v=RuKNF8tDmbY

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

மோட்டார் வாகன விபத்து குறித்து சட்டம்

மோட்டார் வாகன விபத்து குறித்து சட்டம்

மோட்டார் வாகன விபத்து குறித்து சட்டம்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

மோட்டார் வாகன விபத்து குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்ற முக்கிய விஷயங்கள் மட்டும் பார்ப்போம். இன்றைக்கு வண்டி ஓட்டிக்கொண்டு போகும்பொழுது அது இரு சக்கர வாகனமகவோ நான்கு சக்கர வாகனமகவோ இல்லை வேற வாகனமாகவோ இருந்தாலும் விபத்து நிறைய நடக்கிறது என்று நிறைய பேருக்கு தெரியும். இந்த மாதிரி ஒரு விபத்து நடக்கும்பொழுது முதலில் என செய்யவேண்டும், என்றால் விபத்து ஏற்படுத்திய நபராக இருந்தாலும் அல்லது விபத்தை பார்க்கிற ஒரு நபராக இருத்தலும் என செய்ய வேண்டுமென்றால் யாருக்காவது இந்த விபத்தில் அடிப்பட்டது என்றால் உடனடியாக 108 என்ற தொலைப்பேசி எண்ணை அழைத்து பாதிக்கப் பட்ட நபருக்கு உடனடியாக மருத்துவ உதவி கொடுக்கிறதுக்காக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதன் பிறகு சட்டம் என்ன சொல்கிறது என்றால் இந்த மாதிரி ஆம்புலன்ஸில் எடுத்துட்டு போவது, அரசு மருத்துவமணையில் சேர்த்தார்கள் என்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் அரசு மருத்துவமனையில் அவரகள் கொடுக்கிற ஆவணங்களில் கையொப்பமிட்டுவிட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டு செல்லலாம். விபத்தை ஏற்படுத்திய நபர்மீது போக்குவரத்து காவல் துறையினர் கேஸ் ஏதேனும் பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் அந்த விபத்தின் தன்மையே பொறுத்து தகுந்த சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்படும்.

criminal case

அது குற்றவியல் வழக்கு (Criminal case). எல்லோரும் கிரிமினல் கேஸ் என்ற உடனே கைதி செய்துவிடுவார்கள் உடனே ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று யாரும் பதட்டமடைய தேவையில்லை. விபத்தின் தன்மை என்ன இருக்கோ அதை பொறுத்துதான் வழக்கு அமையும். இந்த மாதிரியான விஷயங்களில் கிரிமினல் கேஸ் போலீஸ் பதிவு செய்திருந்தால் குற்றத்தின் தன்மையை பொறுத்து சம்பத்தப்பட்ட காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் தொடர்ந்து விசாரணைக்கு நான் ஆஜர் ஆவேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை எழுதி கொடுத்து பெயில் பாண்ட் என்ற படிவத்தில் எழுதிக்கொடுத்து கையொப்பம் இட்டுவிட்டு விபத்தை ஏற்படுத்திய நபர் மீது சட்ட நடவடிக்கைக்கு நான் ஆளாவேன் ,எந்த விதத்திலும் சட்டத்தின் பிடியிலுருந்து தப்பமாட்டேன் என்று உறுதிமொழி கையொப்பம் செய்வதின் பேரில் சம்பந்தப் பட்ட நபர் கைதுசெய்யப்பட மாட்டார், கைது செய்யப்பட்டிருந்தாலும் பிணையில் அவரை விடுவித்துவிடுவார்கள்.

இது சட்டத்தில் இருக்கிற ஒரு விஷயம் அதற்குப் பிறகு கிரிமினல் கேஸ் கோர்ட்டில் நடக்கும் அந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் சாட்டப்பட்ட நபர் தாவரளித்தார்கள் என்று சொன்னால் அவருக்கு உரிய தண்டனை என்ன இருக்கோ அதை நீதிமன்றம் நிச்சயமாக கொடுக்கும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்ட நபரோ அவரை சார்ந்த உறவினர்களோ நண்பர்களோ யாரும் கோபமடைந்து விபத்தை ஏற்படுத்திய நபர் மீது எந்த விதத்திலும் வன்முறையில் ஈடுபட கூடாது அதற்கு சட்டத்தில் இடமில்லை. அதற்க்கு பிறகு பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு பெறுவதற்காக காப்பீடு நிறுவங்கள் மீது பாதிக்கபட்ட நபரோ அல்லது அவருடைய உறவினர்களோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீடு பெறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கு இது சிவில் கேஸ். ஆக ஒரு மோட்டார் வாகன விபத்து நடந்தால் ஒரு கிரிமினல் கேஸ் ஓன்று இருக்கும் அது தனி ஒரு சிவில் கேஸ் ஒன்று இழப்பீடு பெறுவதற்காக நாடக்கும் அது தனி. இந்த இரண்டு வித்யாசத்தையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

https://www.youtube.com/watch?v=3J98KI_X4i0

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

பெயில் வகைகள்

பெயில் வகைகள்

பெயில் வகைகள்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

இப்போது எந்த மாதிரியான பெயில் உத்தரவுகள் இருக்கிறது என பார்ப்போம். ஒரு நபர் ஐ கைதானப்பிறகு நீதிமன்றத்தில் நான் இந்த வழக்கில் எந்தவித தவறும் செய்யவில்லை அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கொடுக்கிறது பெயில் பெட்டிஷன். தான் கைதான பிறகு கொடுக்கிற பெயில் பெட்டிஷன். கைது பண்ணுவதற்கு முன்பே நீதிமன்றத்தில் ஒரு பெட்டிஷன் போட்டு என் மீது ஒரு பொய்யான வழக்கு தாக்கலாயிருக்கிறது அந்த வழக்கில் என்னை தவறாக காவல்துறையினர் கைது செய்துவிடலாம் என்று நான் பயப்படுகிறேன்

அதனால் இந்த மனுவை நான் உங்களிடம் கொடுக்கிறேன் இந்த மனு மூலமாய் எந்த சூழ்நிலையிலும் இந்த வழக்கில் காவல் துறையினர் என்னை கைது செய்ய கூடாது அப்படி கைது செய்துவிட்டால் எனக்கு மிகப்பெரிய மானநஷ்டம் பிற நஷ்டங்களெல்லாம் ஏற்படும். அதனால் காவல் துறையினர் இந்த வழக்கில் என்னை கைது செய்யக்கூடாது என்று கொடுக்கிற மனுவின் பெயர் முன்ஜாமீன் மனு எனப்படும் .

Anticipatory Bail Application

ஆங்கிலத்தில் Anticipatory Bail Application என்று சொல்கிறோம். இந்த மாதிரி கைது செய்வதற்கு முன்பே ஒரு மனுவினை நீதிமன்றத்துக்கு கொடுத்து என்னை கைது செய்யக்கூடாது அப்படி கைது செய்துவிட்டால் என்னை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று அந்த பெட்டிஷன் நீதிமன்றத்தில் தாக்கலாகும்போது அது விசாரணைக்கு வரும்.

அது சம்பந்தமாக காவல்துறையை அழைத்து நீதிமன்றம் விசாரிக்கும் இந்த மாதிரி வழக்கு இருக்கிறதா இந்த நபர் மீது, இந்த மாதிரி பெட்டிஷன் கொடுத்திருக்கிறார் என்று காவல்துறையினரை நீதிமன்றம் விசாரிக்கும். அந்த நபர் கைது செய்யப்படக்கூடாது என்ற சட்ட முகாந்திரம் இருக்கிறபோது நீதிமன்றம் முன்ஜாமீன் மனு கொடுத்த நபர் அந்த வழக்கில் கைது செய்யப்படக்கூடாது அப்படி கைதுசெய்துவிட்டால் முன்ஜாமீன் படி அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுப்பார்கள்.

உத்தரவு கிடைத்த பிறகு எந்த நீதிமன்ற எல்லைக்குள் அந்த வழக்கு தாக்கலாயிருக்கோ அந்த நீதிமன்ற நடுவர் Jurisdiction of Magistrate கோர்ட்க்கு போய் இரண்டு தனிநபர் உத்தருவாதம் நீதிமன்றத்தில் கொடுப்பதன் மூலமாக இல்ல நீதிமன்றம் வேறு என்ன நிபந்தனைகளை கொடுத்திருக்கோ அந்த நிபந்தனைகள் படி நாம் கோர்ட்டிற்கு எல்லா டாக்குமெண்ட்ஸ் எழுதி கொடுக்கிறபொழுது நமக்கு பெயில் ஆர்டர் கொடுத்துவிடுவார்கள். இதேபோல் முன்ஜாமீன் உத்தரவு கிடைத்த நபர் அந்த வழக்கில் கைதாகமாட்டார்.

Anticipatory Bail என்கிற ஒரு விஷயம் குற்றவியல் விசாரணை சட்டத்தில் கைதாகாமல் பொய்வழக்கிலிருந்து கைதாகாமல் இருக்கிற ஒரு மிகப்பெரிய விஷயம்.

https://www.youtube.com/watch?v=MIzvKLIkJPo

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

மனித உரிமைகள் என்றால் என்ன

மனித உரிமைகள் என்றால் என்ன

மனித உரிமைகள் என்றால் என்ன

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

சர்வதேச மனித உரிமைகள் தினம் என்கிற நாள் டிசம்பர் 10ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுசரிக்க படுகிற நாள். ஏன் இது அனுசரிக்க படுகிற நாள் என்றால் மனித உரிமைகள் தினம் கொண்டப்படுவதற்கு நேரம் இன்னும் வரவில்லை ஏன்? உலகமுழுக்க அனைத்து மனித உரிமைகளும், அனைத்து மக்களும், எல்லா நாட்டிலும், எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்க படுகின்ற சூழ்நிலை இருக்கிற பொழுது தான் மனித உரிமை தினம் கொண்டாடப்படுவதற்கான

ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்னும் வரவில்லை உலகெங்கிலும் ஏதோ ஒரு மூலையில் நிச்சயமாக மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. நிறைய பேர் மனித உரிமையின் மீறல்களாள் பாதிக்கப்பட்டு தான் ஒவ்வொரு நிமிடமும் உலகமுழுக்க இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனித உரிமை தினம் கொண்டாடபடுவதற்கான நேரமாக இல்லை.

அனுசரிக்கப்படுவதினுடைய நோக்கமென்ன ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் தேதி அந்த நாட்டில் மனித உரிமை தினம் எப்படி இருக்கு இன்னும் எந்த மாதிரி சிறப்பாக மனித உரிமை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான விரைவான நீதி கொடுக்க முடியும் அப்படியென்ற விஷயங்கள் பற்றி எல்லாம் பரிசீலனை செய்வதற்கான ஒரு நேரம் தான் ஒரு நாள் தான் மனித உரிமை தினம்.

Human Rights

இது ஏன் சர்வதேச அளவில் டிசம்பர் 10ஆம் தேதி தேர்ந்தெடுத்தார்கள் என்றால் உலகளாவிய மனித உரிமை பிரகடனம் Universal Declaration of Human Rights சுருக்கமாக UDHR என்று சொல்கிற சர்வதேச மனித உரிமை பிரகடனம் என்கிற சர்வதேச சட்டத்தை ஐக்கிய நாடு சபை டிசம்பர் 10ஆம் தேதி 1948 ஆம் வருடம் ஐநா சபையில் நிறைவேற்றினார்கள், அப்படியென்றால் உலகத்திலுள்ள ஐநா சபையில் இருக்கிற எல்லா நாடுகளும் இந்த சர்வதேச மனித உரிமை சட்டத்தில் சொல்லப்படுகிற 30 வகையான மனித உரிமைகளிலும் அவரவர் நாட்டு மக்களுக்கு நிச்சயம் நாங்கள் வழங்குவோம் எந்த சூழ்நிலைகளிலும்

இந்த 30 வகையான மனித உரிமைகளை நாங்கள் மீறமாட்டோம். அப்படி ஏதேனும் சூழ்நிலை மீறுவதற்காக அமைந்துவிட்டால் யார் மீறினார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக இழப்பீடு தருவோம். இது போன்ற மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று ஐநா சபையில் எல்லா நாட்டு மக்களும் மக்களின் பிரதிநிதிகளும் அந்த நாட்டு அரசாங்கம் மூலமாக சொல்லியிருக்கின்றன. இந்த உறுதிமொழி கொடுத்த நாள் தான் டிசம்பர் 10ஆம் நாள். அதனால்தான் டிசம்பர் 10ஆம் நாளை சர்வதேச மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கிறோம்

https://www.youtube.com/watch?v=J0alOQPHFt4

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

தகவல் பெரும் உரிமைச் சட்டம்

தகவல் பெரும் உரிமைச் சட்டம்

தகவல் பெரும் உரிமைச் சட்டம்

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

தகவல் பெரும் உரிமைச் சட்டம் என்பது என்னவென்றால் இது தமிழில் நிறையபேர் தவறாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று சொல்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் அல்ல இது தகவல் பெரும் உரிமைச் சட்டம். ஆங்கிலத்தில் Right to Information Act சுருக்கமாக RTI சட்டம் என்று சொல்கிறோம்.

இந்த சட்டத்தினால் பொது மக்களுக்கு என்ன பயன் என்று பார்ப்போம். தனிப்பட்ட முறையிலும் இல்ல பொதுவான விஷயங்களுக்காகவும் அரசு அதிகார இடத்தில் அரசு அலுவலகங்களில் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு சட்டம் இது, என்னென்ன தகவல் பெறலாம்? எந்த தகவலையும் அரசு அலுவலகங்களில் இருந்து பெறலாம். அரசு ஆவணங்கள் எல்லாம் ரகசியமானவை என்ற விஷயத்தை நீக்கி இந்த சட்டம் சொல்கிறார்கள். இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் எனக்கு குறிப்பிட்ட தகவல் வேண்டும் நான் ஒரு மனு கொடுத்தேன் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சுருக்கலாம், இல்ல ஜாதி சான்றிதழ் கேட்டுருக்கலாம் வேறு எந்த விஷயமாவது இருக்கலாம் இதில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கிறார்கள் எடுக்கப்படவில்லை என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு என்று ஒரு வெள்ளைத் தநாளில் எழுதி ரூ10.

Registered Post with Acknowledgement Due

கொடுத்து நீதிமன்ற கட்டணம் ஸ்டாம்ப் ஒட்டி அந்த மனுவில் யாருக்கு கொடுக்கவேண்டும் என்றால் உதவி பொது தகவல் அதிகாரி அதாவது Assistant Public Information Officer (APIO) என்று எழுதி எந்த அரசு அலுவலகத்தில் கொடுக்கவேண்டுமோ இப்போ அந்த சான்றிதழில் எந்த வாட்டாச்சி அலுவலகம் என்றால் வாட்டாச்சி அலுவலகத்தில் அந்த முகவரி சேர்த்து நாம் பதிவு தபால் அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அதாவது RPAD (Registered Post with Acknowledgement Due) அந்த அட்டையோடு நாம் அனுப்பிவைத்தால், இந்தமாதிரி தகவல் எப்படிவேண்டும் எழுத்து மூலமாக எனக்கு கொடுங்க என்று கேட்கலாம் அல்லது அந்த கோப்புகளை (Government Files) நான் போய் பார்ப்பதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கலாம். இந்தமாதிரியான தகவல் பெறுவதற்கான வழிவகைசெய்கிற ஒரு சட்டம். இதைபோல் மனு அனுப்பியுள்ளோம் தகவல் பிறகும் கொடுவில்லையென்றால் என்ன செய்வது,

இந்த சட்டத்தில் சர்வேச சட்டத்தின் கீழ் என சொல்லப்படுகிறது என்றால் எந்த மனுப் பெறப்பட்டாலும் அரசு அதிகாரிடம் இருந்து தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு வந்ததென்றால் 30 நாட்களில் தகவலை அந்த அரசு அதிகாரி யார் மனு கொடுத்தார்களோ அவருக்கு தரவேண்டும். அப்படி அந்த அதிகாரி கொடுக்கவில்லையென்றால் அவர் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு நாளைக்கு ரூ250 அபராதம் புடிப்பார்கள். அப்படி 30 நாட்களில் கொண்டுக்கவில்லையென்றால் அந்த அலுவலகத்திலேயே நீங்கள் Appellate Authority என்று சொல்கிற மேல்முறையீட்டு அதிகாரிக்கு இதை தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவை மேல் முறையீட்டு அதிகாரிக்கு (இதில் எந்த ஒரு முத்திரை (stamp) ஓட்ட தேவையில்லை) அனுப்புங்கள்.

State Information Commission

அப்படி அவர்களிடமிருந்தும் தகவல் வரவில்லையென்றால் நீங்கள் மாநில தகவல் ஆணையம் (State Information Commission) அப்படியென்று சென்னையில் உள்ளது அங்கு இரண்டாவது மேல் முறையீடு தாக்கல் செய்தால் அங்கு IAS அதிகாரிகள் இருப்பார்கள் உடனடியாக விசாரணை நடத்தி இந்த தகவல்களை ஏன் மறுத்தீர்கள் என்று அந்த அரசு அதிகாரியிடம் கேட்பார்கள் உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு அபராதம் மூலமாக தண்டனை கொடுப்பதற்கும் மனு கொடுத்தவருக்கு தகவல் கொடுப்பதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கு. இதுனால நாம் Apply Apply No Reply என்று அரசு அலுவலகத்தில் நாம் மனு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் அவர்கள் செயல் படமாட்டார்கள் அப்படியென்ற எண்ணம் எல்லாம் வரவேண்டாம். நிச்சயமாக அரசு அதிகாரியிடமிருந்தது நாம் என்ன தகவல் வேண்டுமென்றாலும் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=L6FC3N1BWa4

Like Us on Facebook

Latest Tweets

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest